குழந்தைத் திருமணம் செய்து வைத்த தந்தை, கணவர், காதலன் உள்பட 6 பேர் மீது போக்சோ !!

 

குழந்தைத் திருமணம் செய்து வைத்த தந்தை, கணவர், காதலன் உள்பட 6 பேர் மீது போக்சோ !!

கன்னியாகுமரியில் 17 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்த புகாரில் தந்தை மற்றும் கணவர் மற்றும் காதலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தக்கலையை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் சுதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த தந்தை அவசர அவசரமாக தங்களுக்கு தெரிந்தவரை சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த அன்று இரவு சிறுமி அழுதுகொண்டே இருந்ததால் காரணத்தை குறித்து மணமகன் விசாரித்தார்.
அப்போது தன்னுடைய காதல் விவகாரத்தை தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த மணமகன் அந்த சிறுமியை அன்றே சிறுமியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். தாலி கட்டியவரிடம் இருந்து தப்பியதாக நினைத்த சிறுமி, சுதீசுக்கு போன் செய்து தனது வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து சுதீஷ் காதலியை சந்திக்க யாருக்கும் தெரியாமல் அவரது வீட்டுக்கு சென்றபோது, கையும் களவுமாக சிறுமியின் தந்தையிடம் சிக்கியுள்ளார்.

குழந்தைத் திருமணம் செய்து வைத்த தந்தை, கணவர், காதலன் உள்பட 6 பேர் மீது போக்சோ !!

இந்த சம்பவத்தை போலீஸ் விசாரிக்கும்போது பெற்றோர் தனக்கு நடத்தி வைத்த அவசர திருமணத்தை தெரிவித்துள்ளார் சிறுமி. 18 வயது நிரம்பாத சிறுமிக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்த பெற்றோர், சிறுமிக்கு தாலி கட்டிய நபர் மற்றும் காதலன் சுதீஷ் ஆகியோர் மீது போக்சோ வழக்கை பதிவு செய்து கைது செய்துள்ளனர்