“ஜெயிச்சதும் 3 கூடை மாம்பழத்துடன் வா” பரப்புரையில் ராமதாஸ் கலகல!!!

 

“ஜெயிச்சதும் 3 கூடை மாம்பழத்துடன் வா” பரப்புரையில்  ராமதாஸ் கலகல!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்த அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ,தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.முதல்வர் பழனிசாமி. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார்.

“ஜெயிச்சதும் 3 கூடை மாம்பழத்துடன் வா” பரப்புரையில்  ராமதாஸ் கலகல!!!

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி பாமக வேட்பாளர் முரளி ஷங்கரை ஆதரித்து நேற்று ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். தனது காரில் அமர்ந்தபடி அவர் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்தும் பரப்புரை செய்தார்.அப்போது பேசிய ராமதாஸ், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அத்துடன் இந்த தொகுதியில் வேட்பாளர் செல்வகுமார் வெற்றி பெற்ற பின் என்னை 3 கூடை மாம்பழத்துடன் வந்து சந்திக்க வேண்டும் என்றார்.

“ஜெயிச்சதும் 3 கூடை மாம்பழத்துடன் வா” பரப்புரையில்  ராமதாஸ் கலகல!!!

முன்னதாக பேசிய அவர் இலவசமாக வாஷிங் மெஷின் ,வருடத்திற்கு ஆறு சிலிண்டர் உள்ளிட்ட திட்டங்களை அதிமுக அறிவித்துள்ளது. மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அதிமுக கொடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை மிஞ்ச தமிழகத்தில் எந்த சக்தியும் இல்லை என்று புகழாரம் சூட்டினார்