’சிபிஎம் கட்சி எங்களுக்குப் பாடம் நடத்த தேவையில்லை’ பாமக ஜி.கே.மணி பதிலடி

 

 ’சிபிஎம் கட்சி எங்களுக்குப் பாடம் நடத்த தேவையில்லை’ பாமக ஜி.கே.மணி பதிலடி

மருத்துவக் கல்வியில் மேற்படிப்புக்கு ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 27 சதவிகித இடஒதுக்கீட்டை பாமக முன்னிலைப் படுத்துவதை கேள்வி எழுப்பியிருந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பதிலடி தந்திருக்கிறார்.

’மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி தமிழகத்தின் பிற கட்சிகள் வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும், ஆனால், பா.ம.க. 27% இட ஒதுக்கீடு கோரி வழக்கு தொடர்ந்திருப்பதால் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அவரது அறியாமை கவலை அளிக்கிறது.

 ’சிபிஎம் கட்சி எங்களுக்குப் பாடம் நடத்த தேவையில்லை’ பாமக ஜி.கே.மணி பதிலடி
balakrishnan CPI(m)

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்திலிருந்து வழங்கப்படும் இடங்களுக்கு தமிழகத்தில் வழங்கப் படுவது போன்று 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வழக்குத் தொடர்ந்து விட்டால் உடனடியாக 50% இட ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி விடுமா? எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தான் தீர்மானிக்கப்படுமே தவிர, பாலகிருஷ்ணன் போன்றவர்கள் வெளியிடும் அறிக்கைகள் அடிப்படையிலோ, அவரது முதலாளிகள் தாக்கல் செய்த அபத்தமான வழக்கு மனுக்களின் அடிப்படையிலோ அல்ல. இந்த அடிப்படையை பாலகிருஷ்ணனும், அவரை இயக்கும் சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

அகில இந்திய தொகுப்பு என்பது உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அகில இந்திய  தொகுப்பை நிர்வகிப்பதும், அதற்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதும் மத்திய அரசு தான். அவ்வாறு இருக்கும் போது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி தான் எந்தப் பிரிவுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். 2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தின்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 27% தான் இட ஒதுக்கீடு  வழங்க முடியும். இது சமூகநீதி பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.

 ’சிபிஎம் கட்சி எங்களுக்குப் பாடம் நடத்த தேவையில்லை’ பாமக ஜி.கே.மணி பதிலடி

அபய்நாத் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி தானே தவிர, மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி அல்ல என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அவரது அறிக்கையையே மீண்டும் ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளலாம்.  இந்த உண்மைகளும், அரசியலமைப்பு சட்ட விதிகளும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நன்றாக தெரிந்ததால் தான் சாத்தியமாகும் தீர்ப்பைப் பெறுவதற்காக 27% இட ஒதுக்கீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது.

மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியலமைப்புச் சட்டம் குறித்தோ, அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்தோ எதையும் தெரிந்து கொள்ளாமல், தங்களின் முதலாளிகள் உத்தரவிட்டதன் அடிப்படையில், அவர்கள் தாக்கல் செய்த வழக்கு மனுவின் நகலை வாங்கி, பெயரை மட்டும் மாற்றி கையெழுத்திட்டு தாக்கல் செய்ததால் தான் அபத்தமான வாதங்களை வைத்துக் கொண்டிருக்கிறது.

 ’சிபிஎம் கட்சி எங்களுக்குப் பாடம் நடத்த தேவையில்லை’ பாமக ஜி.கே.மணி பதிலடி

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவானவர்களைப் போன்று வேடமிடும் கே.பாலகிருஷ்ணனுக்கு  உண்மையிலேயே சமூக நீதி மீது அக்கறை இருந்தால் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

  • அகில இந்திய தொகுப்பு உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது என்றாலும் கூட, மத்திய அரசு நினைத்தால், உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெற்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம். பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீடு 2010-11 ஆம் ஆண்டில் தான் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. அப்போது மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இல்லை. இருந்திருந்தால், பட்டியலினம், பழங்குடியினருக்கு வழங்கியது போன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பார். ஆனால், அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் முதலாளி கட்சியும், காங்கிரசும் இணைந்து தான் மத்தியில் ஆட்சி செய்தன. இன்னும் கேட்டால் முதலாளி கட்சியைச் சேர்ந்த ஒருவர் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராகவும் இருந்தார். அவர்கள் நினைத்திருந்தால் அப்போதே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். அதை அவர்கள் செய்யாதது ஏன்? என்று கேட்டு கே.பாலகிருஷ்ணன் கண்டிப்பாரா?
  •  ’சிபிஎம் கட்சி எங்களுக்குப் பாடம் நடத்த தேவையில்லை’ பாமக ஜி.கே.மணி பதிலடிமார்க்சிஸ்ட் கட்சியின் முதலாளி கட்சியும், காங்கிரசும் இணைந்து தான் மத்தியில் ஆட்சி செய்த 2011-ஆம் ஆண்டில் தான் நீட் தேர்வை திணித்தது. அதற்கான கோப்பு முதலாளி கட்சியை சேர்ந்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சரை கடந்து தான் சென்றிருக்க வேண்டும். இப்போது நீட் தேர்வை எதிர்க்கும் பாலகிருஷ்ணன் அதற்கு காரணமான முதலாளி கட்சியை கண்டிக்க முன்வருவாரா?
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதால் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினரின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அதனால், உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து தேசிய அளவில் போராட மார்க்சிஸ்ட் கட்சி தயாரா?
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மாநில அளவில் மட்டுமல்ல…. தேசிய அளவிலும் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. அதற்கான ஒரே தீர்வு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அதன் முதலாளிகளின் நிலைப்பாடு என்ன? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?

நிறைவாக தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஓர் அறிவுரை…

சமூக நீதி, இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து பாட்டாளி மக்கள் கட்சிக்கு பாடம் நடத்த முயற்சி செய்ய வேண்டாம்.