பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகிறது!

 

பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகிறது!

பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகிறது!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது . வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அதிமுக அரசு வழங்கியதால் குறைவான தொகுதிகளை பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார். அத்துடன் பாமக, அதிமுகவிடம் கேட்டுள்ள தொகுதிகளில் உத்தேச பட்டியலும் வெளியாகியுள்ளது. திருத்தணி, வேளச்சேரி, திருப்போரூர், செங்கல்பட்டு, விக்கிரவாண்டி ,ஆரணி , பென்னாகரம், வீரபாண்டி, காட்டுமன்னார்கோவில், அணைக்கட்டு, ஓசூர், கலசபாக்கம், கும்மிடிபூண்டி, சங்கராபுரம் ,நெய்வேலி, சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, குன்னம், திண்டிவனம், பண்ருட்டி ,மேட்டூர், ஜெயங்கொண்டம், ஆற்காடு உள்ளிட்ட 23 தொகுதிகளில் பாமக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகிறது!

இந்நிலையில் இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை மறுநாள் (05.03.2021) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் , பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து தெரிவிக்கவுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை 11ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பாமக தேர்தல் அறிக்கை 5இல் வெளியாகிறது.