மின் கட்டணம் ரத்து; சிறப்பு நிவாரணத் தொகை : அன்புமணி கோரிக்கை!

 

மின் கட்டணம் ரத்து; சிறப்பு நிவாரணத் தொகை : அன்புமணி கோரிக்கை!

தமிழகத்தில் இரண்டு வாரம் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு இருப்பதற்கு பாமகவை வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வருகிற 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை இயங்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மத்திய அரசின் பரிந்துரைகளை கொண்டு முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.

மின் கட்டணம் ரத்து; சிறப்பு நிவாரணத் தொகை : அன்புமணி கோரிக்கை!

இந்நிலையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இது பயனுள்ள நடவடிக்கை!தமிழக அரசு அளித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இது தான் சிறந்த வழி. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்!

முழு ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு நடப்பு சுழற்சிக்கான இரு மாத மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இது கடந்த காலத்தில் திமுகவும் வலியுறுத்திய கோரிக்கை தான்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.