கொரோனா உதவியை ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறித்துக் கொள்வதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

 

கொரோனா உதவியை ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறித்துக் கொள்வதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கொரோனா உதவி ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறித்துக் கொள்வதா? என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா உதவியை ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறித்துக் கொள்வதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில், ” தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 165 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கு கடைகள் தான் திறந்துள்ளன என்றாலும் வணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரு மடங்கு நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது அரசு.

கொரோனா நிதியுதவியாக ரூ.4200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்கவுள்ளது. ஆனால், தினசரி 165 கோடிக்கு மது விற்றால் ஒரு மாதத்தில் ரூ.5000 கோடியை மக்களிடமிருந்து மதுவைக் கொடுத்து அரசு பறித்துக்கொள்ளும். ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம்?

மக்கள் நோயின்றி, குடும்பத் தகராறுகள் இல்லாமல் வாழ மிகச்சிறந்த வழி மதுக்கடைகளை மூடுவது தான். அதனால் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.