பாமக 32-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

 

பாமக 32-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது அந்த கட்சி தொடங்கி இன்றுடன் 32-வது ஆண்டுகள் ஆகிறது.

பாமக 32-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

இந்நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமகவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். பாட்டாளி மக்கள் கட்சியின் 32ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுவதையொட்டி, அதிமுக சார்பில் தமது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொண்டேன்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.