வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு வேதனை அடைந்துள்ளேன்: பிரதமர் மோடி

 

வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு வேதனை அடைந்துள்ளேன்: பிரதமர் மோடி

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடலக்குறைவினால் காலமானார். அவர் காலமான செய்தியை ராம்விலாஸ் பஸ்வானின் மகனும் லோக் ஜன சக்தி தலைவருமான சிராக் பஸ்வான் அறிவித்தார். 5.7.1946ல் பீகாரில் பிறந்த ராம்விலாஸ் பஸ்வான் எட்டு முறை மக்களவை தேர்ந்தெடுப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மறைந்தார்.

வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு வேதனை அடைந்துள்ளேன்: பிரதமர் மோடி

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு வேதனை அடைந்துள்ளேன். ராம் விலாஸ் பஸ்வானின் மறைவு இந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடைய மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பும் கூட, ஒவ்வொரு ஏழையும் கண்ணியமாக வாழ வேண்டுமென எண்ணியவரை இழந்துவிட்டோம்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.