உற்பத்தி, சேவை, கல்வித்துறையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு சிறப்பான இடம் இந்தியா தான்: மோடி

 

உற்பத்தி, சேவை, கல்வித்துறையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு சிறப்பான இடம் இந்தியா தான்: மோடி

கனடாவில் நடைபெற்றுவரும் இந்தியாவில் முதலீடு தொடர்பான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இந்த மாநாட்டில் வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிதியங்கள், மற்றும் பல்கலைக் கழகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

உற்பத்தி, சேவை, கல்வித்துறையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு சிறப்பான இடம் இந்தியா தான்: மோடி

மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “உற்பத்தி, சேவை, கல்வித்துறையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு சிறப்பான இடம் இந்தியா தான். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருக்கக்கூடிய பொதுவான அம்சத்தின் மூலமாக இரு தரப்புக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளது. தொழில் முனைவோர் மற்றும் கடுமையாக
உழைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடிய சூழல் உண்டாகியுள்ளது. விவசாயத்துறையில் இந்தியா கொண்டு வந்துள்ள மாற்றத்தின் காரணமாக விவசாயிகளுக்கு லாபம் அதிகரிப்பது மட்டுமின்றி ஏற்றுமதியும் அதிகரிக்கும்.

தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் விவசாய ஏற்றுமதி 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா இன்று மட்டுமல்ல நாளைக்கும் மிகவும் வலிமையாக இருக்கும். 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா இதுவரை மருந்து பொருட்களை விநியோகித்து உள்ளது. இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டில் மேலும் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. முதலீடுகளை அதிகரிப்பதற்காகவே அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க எளிதான நாடுகளின் பட்டியலில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம்.ம்இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு ஈர்ப்பு 23 சதவீதம் அதிகரித்துள்ளது.ம்6 மாதங்களிலேயே இந்தியா 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை ஈர்த்துள்ளது. ஏழை மக்கள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்காக சிறப்பு பொருளாதார தொகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.” எனக் கூறினார்.