நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

 

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 5ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டாலும், நாட்டின் பொருளாதார நலன் கருதி, சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் இல்லத்தில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப்பணி குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.