தீபாவளியில் ராணுவ வீரர்களுக்காக விளக்கேற்றுவோம் – பிரதமர் மோடி

 

தீபாவளியில் ராணுவ வீரர்களுக்காக விளக்கேற்றுவோம் – பிரதமர் மோடி

இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தீபாவளியில் ராணுவ வீரர்களுக்காக விளக்கேற்றுவோம் – பிரதமர் மோடி

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ நமது நாட்டை அச்சமின்றி பாதுகாக்கும் நமது ராணுவ வீரகளுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் இந்த தீபாவளியன்று விளக்கேற்றுவோம். தைரியமிக்க நமது வீரர்கள் மீது நாம் கொண்டுள்ள நன்றி உணர்வை வார்த்தைகளால் மட்டும் வெளிப்படுத்த முடியாது. எல்லையில் உள்ள பாதுகாப்புப்படை வீரர்களின் குடும்பத்தினருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுடன் ராணுவ வீரர்கள் குறித்த காணொலி ஒன்றையும் அத்துடன் உரை ஒன்றையும் பிரதமர் மோடி இணைத்துள்ளார்