‘திரையுலகிலும் அரசியலிலும் பரவலாக மதிக்கப்பட்டவர்’ – எம்.ஜி.ஆருக்கு மோடி புகழாரம்!

 

‘திரையுலகிலும் அரசியலிலும் பரவலாக மதிக்கப்பட்டவர்’ – எம்.ஜி.ஆருக்கு மோடி புகழாரம்!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘திரையுலகிலும் அரசியலிலும் பரவலாக மதிக்கப்பட்டவர்’ – எம்.ஜி.ஆருக்கு மோடி புகழாரம்!

அந்த பதிவில், ‘பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம்’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பலராலும் போற்றப்பட்ட எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை, அரசியல் தலைவர்கள் பலர் நினைவு கூர்ந்துள்ளனர். அந்த வகையில் அதிமுக அரசுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக தலைவரும் பிரதமருமான மோடி, இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார்.