சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி: காத்திருக்கும் தொண்டர்கள்!

 

சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி: காத்திருக்கும் தொண்டர்கள்!

பல்வேறு திட்டங்களை தொடக்கி வைக்க தமிழகம் வரும் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவரது வருகையையொட்டி 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு சென்னை வரும் பிரதமர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார்.

சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி: காத்திருக்கும் தொண்டர்கள்!

புதிய மெட்ரோ சேவை, சென்னை கடற்கரை-அத்திப்பட்டு ரயில் பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடக்கி வைக்கிறார். அதே போல, புதிய அர்ஜூன் பீரங்கி வாகனத்தையும் நாட்டுக்காக அர்ப்பணிக்க உள்ளார் பிரதமர் மோடி. காலை 10.30 மணிக்கு சென்னைக்கு வரும் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். அவரது வருகையை எதிர்நோக்கி அதிமுகவினரும் பாஜகவினரும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கும் நிலையில், சென்னையே விழாக் கோலமாக காட்சியளிக்கிறது. மோடியை வரவேற்க விமான நிலையம் அருகே தொண்டர்களின் கூட்டம் குவிந்துள்ளது.
: