தான் டீ விற்ற ரயில் நிலையத்தை திறக்க உள்ள பிரதமர்!

 

தான் டீ விற்ற ரயில் நிலையத்தை திறக்க உள்ள பிரதமர்!

பிரதமர் மோடி தனது சொந்த ஊரான வாட்நகரில் புதுப்பிக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தை நாளை திறந்து வைக்கவுள்ளார்.

தான் டீ விற்ற ரயில் நிலையத்தை திறக்க உள்ள பிரதமர்!

குஜராத் மாநிலத்திற்கு நாளை செல்ல உள்ள பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்டுள்ள வத்நகர் ரயில் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். சிறுவயதில் இந்த ரயில் நிலையத்தில் அவர் டீ விற்றதாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து புனரைக்கப்பட்டுள்ள காந்திநகர் ரயில் நிலையம் மற்றும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட 318 அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலையும் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். இதனையடுத்து காணொலி காட்சி மூலம், காந்திநகர்-வாரணாசி வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் ரயில் மற்றும் காந்திநகர்-வரேதா ரயில் சேவையையும், மெஹசனா-வரேதா அகல பாதை ரயில் பாதையையும் பிரதமர் மோடி தொடங்கிவைக்கவுள்ளார்.