இந்த சலூன்கடைக்காரரால் இந்தியாவுக்கு பெருமை – பிரதமர் மோடி

 

இந்த சலூன்கடைக்காரரால் இந்தியாவுக்கு பெருமை – பிரதமர் மோடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சலூன் கடை நடத்தி வரும் பொன்மாரியப்பன் தனது கடையின் ஒரு பகுதியில் நூலகம் ஒன்றை அமைத்திருக்கிறார். அவருடைய சலூன் கடைக்கு வருபவர்கள் முடித்திருத்தம் செய்துகொள்வதுடன் நூல்களையும் படித்து பயனடைகின்றனர். அதோடு, தனது கடையில் காத்திருக்கும் வாடிக்கையாளர் ஒரு புத்தகத்தை படிக்கிறார் என்றால், அவருக்கு பொன்.மாரியப்பன் சலூன் கட்டணத்தில் தள்ளுபடி சலுகையும் அளிக்கிறார். பொன்மாரியப்பனின் இந்த முயற்சிக்கு பிரதமர் மோடி பாரட்டுக்களை தெரிவித்தார்.

இந்த சலூன்கடைக்காரரால் இந்தியாவுக்கு பெருமை – பிரதமர் மோடி

இன்று நடந்த மான் கி பாத் நிகழ்ச்சியில், தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் மாரியப்பனிடம் பிரதமர் மோடி பேசினார். வணக்கம் நல்லா இருக்கிறீங்களா? என தமிழில் பேசிய மோடி, கற்றல் மற்றும் வாசித்தலை வளர்க்க தனித்தன்மை வாய்ந்த முயற்சியை பொன் மாரியப்பன் மேற்கொண்டுவருவதாகவும் பொன் மாரியப்பனால் இந்தியாவுக்கு பெருமை என்றும் தெரிவித்தார். அவர் திருக்குறளை விரும்பி படிக்கிறார் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சியாகவுள்ளதாக மோடி கூறினார்.