மீண்டும் ஊரடங்கா? அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை

 

மீண்டும் ஊரடங்கா? அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 1,13,85,339 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,10,07,352 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,58,725 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,19,262 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மீண்டும் ஊரடங்கா? அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை

கடந்த டிசம்பர் 2ஆம் வாரத்தில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்பு விகிதம் 33% அதிகரித்துள்ளதாக மருத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக நாட்டின் மொத்த வைரஸ் பாதிப்பில் 85 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா அதிகரிப்பு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் கட்டாயம், உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும்படி மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வரும் 17 ஆம் தேதி நாளை மறுநாள் ஆலோசனை நடத்தவுள்ளார். கோவிட் தடுப்பூசி மாநிலத்தில் எந்த அளவுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய அரசு மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.