காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை: புகைப்படங்கள் உள்ளே!
Oct 2, 2020, 08:06 IST1601606169000
மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ் காடில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தலை வணங்குகிறோம்!!! இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேச மக்கள் அனைவரும் மகாத்மா காந்திக்கு தலை வணங்குகிறோம்.
வளமான மற்றும் சகோதரத்துவமான இந்தியாவை உருவாக்குவதில் அவரின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டும் அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.