பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

 

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது இன்று தொடங்கியுள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் திடீரென்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டனர். மதிப்பெண்களில் சந்தேகம் உள்ளவர்கள், மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்ய, விடைத்தாள் நகல் பெற இன்று இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று மறுகூட்டல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர்.

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
விடைத்தாள் நகல் பெற ரூ.275ம், மறு கூட்டலுக்கு உயிரியலுக்கு ரூ.305ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205ம் வசூலிக்கப்படுகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளிலேயே மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்பைத் தவிர்க்க மாணவ, மாணவிகள் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.