பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவி தற்கொலை!
தென்காசி
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அம்பேத்கர் மேல தெருவை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மகள் சண்முகப்பிரியா(17). இவர் சிவகிரியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில், சண்முகபிரியா தன்னுடன் வகுப்பில் படிக்கும் மாணவருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது தயார் கண்டித்துள்ளார்.
இதனால் சண்முகப்பிரியா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், மகள் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதனர். பின்னர், இதுகுறித்து அவர்கள் சிவகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அவரது தந்தை கணேசன் அளித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.