‘விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தாமதமாகும்’- இஸ்ரோ தலைவர் தகவல்

 

‘விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தாமதமாகும்’- இஸ்ரோ தலைவர் தகவல்

இந்திய வீரர்களை விண்வெளிக்கு முதன் முறையாக அனுப்பும் “ககன்யான்” திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 2019-ம்ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டம் வரும் 2022 -ம் ஆண்டு செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து இந்த திட்டத்திற்காக விண்வெளி செல்லும் இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன.

‘விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தாமதமாகும்’- இஸ்ரோ தலைவர் தகவல்


இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியதால் விண்வெளி பயிற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் ‘ககன்யான்’ திட்டத்திற்கான பணிகள் மீண்டும் செயல் படுத்தப் பட்டன.

‘விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தாமதமாகும்’- இஸ்ரோ தலைவர் தகவல்


இந்நிலையில் தற்போது இஸ்ரோ தலைவர் சிவன் ககன்யான் “கொரோனா தொற்று காரணமாக ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளது. இதனால் குறித்த காலத்திற்குள் இத்திட்டத்தை செயல்படுத்த இயலாத நிலை உருவாகியுள்ளது. எனவே ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என தெரிவித்துள்ளார். – இர. சுபாஸ் சந்திர போஸ்.