காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம் – சபாநாயகர் அப்பாவு தகவல்!

 

காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம் – சபாநாயகர் அப்பாவு தகவல்!

தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபையில் காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம் – சபாநாயகர் அப்பாவு தகவல்!

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப இது போன்ற மின்னணு பட்ஜெட்டை கொண்டு வர வேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இ – பட்ஜெட் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.