ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் பியூஷ் கோயல்

 

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்க போவதாகவும், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் முதலீடுக்கு அனுமதி அளிக்க உள்ளதாகவும் 109 இணை பாதைகளில் 151 அதிநவீன ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. தனியார் பங்களிப்பு மூலம் நவீன வசதிகள் அறிமுகம், குறைவான பயண நேரம், வேலைவாய்ப்பு உருவாக்கம், மேம்பட்ட பாதுகாப்பு, உலகத் தரம் வாய்ந்த சேவைகள் கிடைக்கும் என ரயில்வே விளக்கமளித்திருந்தது. இதற்கான டெண்டர் 2021 ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் பம்பார்டியர் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாடா ரியாலிட்டி, பிரான்சின், அல்ஸ்தாம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, டல்கோ, மெக்குயர் குழுமம் ஆகிய நிறுவனங்கள் ரயில் போக்குவரத்தை தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்பட்டன.

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் பியூஷ் கோயல்

இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை. ரயில்வே விரிவாக்கம், நவீனமயம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.50 லட்சம் கோடி நிதி முதலீடு தேவைப்படுகிறது” என தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி – தாதன்குளம் ரயில் நிலையத்தை மூடப்படுமா? என திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் அப்படி எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என விளக்கமளித்தார்.