பியூஷ் சாவ்லாவின் தந்தை மரணம்!

 

பியூஷ் சாவ்லாவின் தந்தை மரணம்!

கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா சிக்கி தவித்து வருகிறது. கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் விளையாட்டு வீரர்கள், சினிமா துறையினர் உள்ளிட்ட பிரபலங்களும் அவர்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்படுகின்றனர். சிலர் மரணிக்கவும் செய்கின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லாவின் தந்தை இன்று உயிரிழந்திருக்கிறார். தொற்றிலிருந்து மீண்டாலும் அதன் ஏற்படுத்திய தாக்கத்தால் மரணித்தார்.

பியூஷ் சாவ்லாவின் தந்தை மரணம்!

இது தொடர்பாக பியூஷ் சாவ்லா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், “என்னுடைய அன்புக்குரிய தந்தை பிரமோத் குமார் சாவ்லா இன்று காலை காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் மீண்டபோதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய பிரச்சினைகளால் சிரமப்பட்டு வந்த நிலையில் என் தந்தை காலமானார். இந்தக் கடினமான நேரத்தில் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். என் தந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரின் தந்தையின் இறப்புக்கு சக கிரிக்கெட் வீரர்களும் அவர் இடம்பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மும்பை நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், “தந்தை பிரமோத் குமார் சாவ்லாவை இழந்த பியூஷ் சாவ்லாவுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தக் கடினமான நேரத்தில் நாங்கள் உங்களுடனும், உங்கள் குடும்பத்துடனும் இருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.