ஒரத்தநாடு விவசாயிக்கு பார்சலில் வந்த பைப் வெடிகுண்டு!
Sep 18, 2020, 16:55 IST1600428355000
ஒரத்தநாடு விவசாயிக்கு கூரியரில் பைப் வெடிகுண்டு வந்திருப்பதால், அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூர் பகுதியை சேர்ந்த விவசாயி அறிவழகன். இவருக்கு தனியார் கொரியர் சேவை மூலம் ஒரு பார்சல் வந்தது. அதை பிரித்துப்பார்த்ததும், அதில் பைப் வெடிகுண்டு இருந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர், போலீசில் புகார் அளித்தார்.
புகாரி பேரில், பைப் வெடிகுண்டை கைப்பற்றிய போலீசார், அதை அனுப்பியது யார்? அது எங்கு தயாரிக்கப்பட்டது? அறிவழகனுக்கு அந்த வெடிகுண்டு ஏன் அனுப்பப்பட்டது? என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.