பாகிஸ்தான் விமான விபத்து: விமானியின் அலட்சியத்தால் பலரின் உயிர் பறிபோனது

 

பாகிஸ்தான் விமான விபத்து: விமானியின் அலட்சியத்தால் பலரின் உயிர் பறிபோனது

கராச்சி: பாகிஸ்தான் விமான விபத்துக்கு அந்த விமானத்தை இயக்கிய விமானியின் அலட்சியமே காரணம் என தெரிய வந்துள்ளது.

கடந்த 22-ஆம் தேதி கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே ஏர்பஸ் ஏ-320 பயணிகள் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 97 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த விமானத்தில் பயணித்த இருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர்.

பாகிஸ்தான் விமான விபத்து: விமானியின் அலட்சியத்தால் பலரின் உயிர் பறிபோனது

இந்நிலையில், இந்த விமான விபத்திற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் விமானத்தின் உயரம் மற்றும் வேகத்தை குறைக்குமாறு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் விமானியிடம் மூன்று தடவை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அவற்றை புறக்கணித்த அவர், தனக்கு விமானத்தின் கட்டுப்பாடு திருப்தி அளிப்பதாகவும் நிலைமையை கையாள முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் எஞ்சின் செயலிழந்த காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விமானியின் அலட்சியப் போக்கால் 97 பேரின் உயிர் காற்றில் கரைந்தது.