ஊரடங்கு நேரத்தில் ஊறுகாய் ஆசைய அடக்கலேன்னா என்னாகும் தெரியுமா ?

 

ஊரடங்கு நேரத்தில் ஊறுகாய் ஆசைய  அடக்கலேன்னா என்னாகும் தெரியுமா ?

அதிகமாக அமிலத்தன்மை ஊறுகாயில் இருக்கிறது. இதனால் வயிற்றுப்புண் வரவும் வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனால் தொற்றுநோயும் வர கூடும்.

ஊறுகாய் சாப்பிட்டால் அடிவயிற்றில் வலிகள், தசைப்பிடிப்புகள் போன்றவை உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி பயன்படுத்துவோர் ஊறுகாயை தவிர்த்தால் நல்லது.

ஊரடங்கு நேரத்தில் ஊறுகாய் ஆசைய  அடக்கலேன்னா என்னாகும் தெரியுமா ?

ஊறுகாய் அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள், உப்புகள் சேர்க்கப்படுகிறது. உடலில் சூட்டின் அளவு அதிகமாக உள்ளவர்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாய் சாப்பிடுவோருக்கு சில சமயங்களில் வயிற்றுப் போக்கினால் பாதிப்படைகிறார்கள்.

அதிகமாக அமிலத்தன்மை ஊறுகாயில் இருக்கிறது. இதனால் வயிற்றுப்புண் வரவும் வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதனால் தொற்றுநோயும் வர கூடும்.

ஊறுகாயில் அதிகப்படியான எண்ணெய் சேர்க்கப்படும். இதனால் மாரடைப்புகள் வரவும் வாய்ப்புள்ளது என்பதை மறவாதீர்கள்.

அதிகபடியான ஊறுகாயை சாப்பிடும் போது ஊறுகாயில் இருக்கும் சாறு செரிமான பிரச்சனையை உண்டாக்கும். . ஊறுகாயில் அதிகப்படியான சோடியம் உள்ளது. இதனால் சிறுநீரகத்தின் செயல்பாட்டில் பாதிப்பு உண்டாகலாம். சிறுநீரை முழுவதுமாக வெளியேற்ற முடியாமல் போகலாம். ஊறுகாய் அதிகப்படியாக உடலுக்கு செல்லும் போது உடலில் சிறுநீரக உறுப்புக்கு அதிகப்படியான வேலை உண்டாக கூடும். உடலில் இருக்கும் உப்பை வெளியேற்ற அதிகம் உழைக்க வேண்டிய நிலை உண்டாகும்

அதுமட்டுமல்லாமல் இதிலிருக்கும் அதிகப்படியான உப்பு உயர் இரத்த பிரச்சனையை உண்டாக்கிவிடும். அதனால் தான் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதிகம் ஊறுகாய் சேர்க்கூடாது என்று சொல்கிறார்கள்.

ஊறுகாயிலிருப்பது மோசமான கொழுப்புகளாகும். டிரான்ஸ் கொழுப்பு உடலில் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அல்லது எல்.டி.எல் கொழுப்பின் அதிகரிப்புக்கு காரணமாகிறது. இது இதய நோய்கள், உடல் பருமன் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.  மேலும் ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான காரம் அல்சர் பிரச்சனையை ஏற்படுத்தும்.