“ஆப்ரேஷன் பண்ணும்போது ஆபாசம் ,பேஷண்டை பார்க்கும்போது பலான மெசேஜ்” -பெண் டாக்டரை டார்ச்சர் செய்த டாக்டர் .

 

“ஆப்ரேஷன் பண்ணும்போது ஆபாசம் ,பேஷண்டை பார்க்கும்போது பலான மெசேஜ்” -பெண் டாக்டரை டார்ச்சர் செய்த டாக்டர் .


ஒரு பெண் டாக்டருக்கு பலான மெஸேஜ்கள் அனுப்பி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்திய ஆண் டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

ஹைதராபத்தில் ஒஸ்மானியா அரசாங்க பொது மருத்துவமனையில் (ஓஜிஎச்)30 வயதான ஆண் மருத்துவர்
பணியாற்றினார். அவர் அரசு நடத்தும் நிஜாமின் மருத்துவ அறிவியல் கழகத்தின் (நிம்ஸ்) ஒரு பெண் மருத்துவரை காதலித்து வந்தார் .அதனால் அந்த பெண் மருத்துவரை அவர் பலமுறை தன்னை காதலிக்குமாறு தொல்லை படுத்தியுள்ளார் .மேலும் அந்த பெண்ணுக்கு எந்நேரமும் ஆபாச மெசேஜை அனுப்பி அவரை டார்ச்சர் செய்துள்ளார் .பல நேரங்களில் ஆப்பரேஷன் பண்ணும்போது பலான மெஸேஜ்கள் அனுப்பியுள்ளார் .அதனால் அந்த பெண் மருத்துவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் .
மேலும் அந்த டாக்டர் அந்த பெண் டாக்டரை பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ள அவரை வற்புறுத்தியுள்ளார் .அதன் பின்னர் அந்த பெண் டாக்டர் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மருத்துவர் அந்த பெண்ணை பலமுறை மிரட்டியுள்ளார் .மேலும் தன்னை திருமணம் செய்யவில்லையென்றால் நிம்மதியாக வாழ விடமாட்டேனென்று மிரட்டியுள்ளார் .இந்த மிரட்டலை போன் மூலமாகவும் ,நேரிலும் சொல்லியிருக்கிறார் .இதனால் மிகுந்த எரிச்சலைடைந்த அந்த பெண் மருத்துவர் அந்த ஆண் டாக்டர் மீது போலீசில் புகாரளித்தார் .அவரின் புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் செவ்வாய்க்கிழமை அவருக்கு காவல்துறை முன் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

“ஆப்ரேஷன் பண்ணும்போது ஆபாசம் ,பேஷண்டை பார்க்கும்போது பலான மெசேஜ்” -பெண் டாக்டரை டார்ச்சர் செய்த டாக்டர் .