எஸ்பிபி இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 7 பேர் செல்போன் திருட்டு!

 

எஸ்பிபி இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 7 பேர் செல்போன் திருட்டு!

ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி எஸ்பிபி மரணம். கடந்த 51 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த எஸ்பிபி உடல்நல குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் என படைச்சூழ வந்து இறுதியஞ்சலி செலுத்தி சென்றனர். தாமரைபாக்கத்தில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமானோர் வந்ததால், சுமார் 500 போலீஸ் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.

எஸ்பிபி இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 7 பேர் செல்போன் திருட்டு!

இருப்பினும் எஸ்பிபி இறுதிச் சடங்கில் கலந்து கொண்டோரில் 7 பேர் செல்போன் திருட்டு போனதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் எஸ்பிபியின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியிருந்ததால் அவரவர் உடைமைகளில் கவனம் செலுத்தாமல் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர்.