பெட்ரோல் – டீசல் விலை உயர்வு… ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

 

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு… ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பெட்ரோல் – டீசல், விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு… ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

இந்த நிலையில், பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அன்படி, ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ம.நீ.ம கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் துரை சேவகன், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தம் ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல் – டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், மத்திய அரசு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.