சந்தேகத்தால் மனைவியை கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது

 

சந்தேகத்தால் மனைவியை கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது

சென்னை

பூந்தமல்லி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெட்ரேல் பங்க் ஊழியரை போலீசார் கைதுசெய்தனர். சென்னை பூந்தமல்லி ரைட்டர் தெருவை சேர்ந்தவர் தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர் நூரூதீன்(52). இவரது மனைவி அசினா பேகம்(42), இவர்களுக்கு அல்தாப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த அசினா பேகம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சந்தேகத்தால் மனைவியை கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது

மேலும், அசினாவின் கணவர் நூருதீன் மாயமானதால் போலீசாரின் சந்தேகம் அவர் மீது திரும்பியது. இதனையடுத்து கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த நூருதீனை தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த நூருதீனை கைதுசெய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேகத்தால் மனைவியை கொன்ற பெட்ரோல் பங்க் ஊழியர் கைது

அப்போது, அசினாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட நூருதீன் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், சம்பவத்தின்போது தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமைடந்த நூருதீன் அசினாவை கழுத்தை நெறித்துக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தப்பியோடி நூருதீன் உறவினர் ஒருவரிடம் செல்போனில் பேசி வந்ததை அறிந்த போலீசார், அவரை லாவகமாக பேசி வரவழைத்து கைது செய்தனர்.