மதுபோதையில் இருந்த ரவுடிகள்… தட்டிக் கேட்ட ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

 

மதுபோதையில் இருந்த ரவுடிகள்… தட்டிக் கேட்ட ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

கொரோனா வைரஸ் காரணாமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் இருந்த ரவுடிகள்… தட்டிக் கேட்ட ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

 

சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் ஷாஜகான். இவரது வீடு மதுரை, மேலமடைப் பகுதியில் இருக்கிறது. கடந்த 23 ஆம் தேதி ஷாஜகான் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது, அந்த வழியே சில ரவுடிகள் மதுபோதையில் சென்றதாகவும், அதனை ஷாஜகான் தட்டிக் கேட்ட போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக எழுந்த புகாரில், அண்ணாநகர் காவல்துறையினர் ரவுடிகள் இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதனால் ஷாஜகானை பழிவாங்க எண்ணிய மற்ற ரவுடிகள், நேற்று இரவு அவரது வீட்டின் வாசலில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியதாக சொல்லப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.