தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

 

தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

தமிழகத்தின் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. இதில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தனர்.இதை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி மின்சார வாரியம், போக்குவரத்து கழகங்கள் கடனில் இருப்பதென்றால் அதனை போக்க செயல் திட்டம் வகுக்கலாம் என்றும் பெட்ரோல், டீசல் வரி முன்பில்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ கேள்விக்கு, தமிழகத்தில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது தான் பெட்ரோல் விலை குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த போதும், தமிழகத்தில் மூன்று முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை கலைஞர் குறைத்தார்.மத்திய அரசு பல மடங்கு வரை உயர்த்தியதால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.கச்சா எண்ணெய் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது . ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 75 டாலரைத் தாண்டியுள்ளது சுட்டிக்காட்டி தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.