கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

 

கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனையடுத்து 112 தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது. மேலும், அங்கு சிகிச்சை பெற விருப்பப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கொரோனா பரிசோதனைக்கு ரூ.4,500 செலுத்த வேண்டும் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப் படுவதாக பரவலாக கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதனால் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜவாஹிருல்லா மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பொதுப்படையான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த முடியாது என்று கூறி நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.