தோனிமடுவு திட்டத்தை நிறைவேற்ற கோரி ஆட்சியரிடம் மனு

 

தோனிமடுவு திட்டத்தை நிறைவேற்ற கோரி ஆட்சியரிடம் மனு

விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் தோனிமடுவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம், சமத்துவ மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் நிர்வாகிகள், தோனிமடுவு திட்டம் நிறைவேற்றப்பட்டால் கொளத்தூர், பவானி, அந்தியூர் பகுதி விவசாயிகள் பயன் பெறுவர் என்றும், கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், மேட்டூர் சாலையை இருவழிப்பாதையாக மாற்றவும், நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரினர்.

தோனிமடுவு திட்டத்தை நிறைவேற்ற கோரி ஆட்சியரிடம் மனு