“தமிழ்நாடு அரசின் இந்த முடிவு தவறானது; தேவையில்லாதது” – வலுக்கும் எதிர்ப்பு!

 

“தமிழ்நாடு அரசின் இந்த முடிவு தவறானது; தேவையில்லாதது” – வலுக்கும் எதிர்ப்பு!

அரியலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கருணாகரன் தாக்கல் செய்த மனுவில், “பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் பெற்ற முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக்கல்வி துறை இணை இயக்குநராகவும், அதன்பின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு வந்தனர். 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை அப்பதவியில் நியமித்து, பள்ளி நிர்வாகம் கண்காணிக்கப்பட்டது.

“தமிழ்நாடு அரசின் இந்த முடிவு தவறானது; தேவையில்லாதது” – வலுக்கும் எதிர்ப்பு!

ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை செயலர் உள்ள நிலையில், எந்தவித சிறப்பு தகுதியும், அனுபவமும் இல்லாத ஆணையர் பதவி என்பது தேவையில்லாதது. இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் அதிகாரங்களை, ஆணையருக்கு வழங்கி கடந்த மே 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது தவறு. ஆணையருக்குப் பதிலாக கல்வித் துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குநராக நியமிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மதராசு உயர் நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.