விஜய், சூர்யா குறித்து அவதூறு! நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு…

 

விஜய், சூர்யா குறித்து அவதூறு! நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு…

நடிகர் நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசிய நடிகை மீரா மிதுன் மீது புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் பிரபலமான மீரா மிதுன் சமீபகாலமாக நடிகர் விஜய், சூர்யா, நடிகை திரிஷா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா மற்றும் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா ஆகியோரைப் பற்றி கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீரா மிதுனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே நடிகை மீரா மிதுன் தூண்டுதலின் பேரில் தனக்கு மிரட்டல் வருவதாக நடிகை ஷாலு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

விஜய், சூர்யா குறித்து அவதூறு! நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு…

இந்நிலையில் அகரம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நடிகர் சூர்யா மற்றும் அவர்களது மனைவி மீது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறாகவும் அவர்களின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசி வரும் நடிகை மீரா மீது இரு பிரிவினரிடைய கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்படும் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி கலாம் சேவை மையம் சார்பில் வழக்கறிஞர் சம்பத் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.