வைகை அணைக்கு குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி : அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

 

வைகை அணைக்கு குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி :  அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கியதால் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

வைகை அணைக்கு குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி :  அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி. இவரது மகன் கௌதம் சர்மா (32). இவர் நேற்று மாலை வைகை அணை பகுதியில் உள்ள பிக்கப் அணை பகுதியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கௌதம் சர்மா தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

வைகை அணைக்கு குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி :  அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

இந்நிலையில் கௌதம் சர்மா நீரில் மூழ்கிய எதிரொலியால் இன்று மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மூன்று மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட வேண்டிய தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கிய நபரை தூக்கிய பின்னர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.