நாளை முதல் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க அனுமதி!

 

நாளை முதல் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க அனுமதி!

கொரானா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம் போன்ற பகுதிகள் 8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படுகிறது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டி நெறிமுறைகளுடன் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் 2000 பேர் சுற்றிப்பார்க்கலாம் எனவும் 10 வயதுக்கு குறைந்தவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு கட்டணத்தை பணமாக செலுத்தமுடியாது என்றும் ஆன்லைன் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்துவரவேண்டும் என தொல்லியல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாளை முதல் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க அனுமதி!

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் சுற்றுலா பகுதிகள் மற்றும் கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் கடந்த மார்ச் மாதம் 21- ஆம் தேதி மூடப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் சுற்றுலா தலங்களையும் கடற்கரையையும் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனிடையே தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை டிசம்பர் 14 ஆம் தேதி திறக்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது குறிப்பிடதக்கது