“அரசு, தனியார் பேருந்துகளில் ஏ.சி. பயன்படுத்த அனுமதி” : தமிழக அரசு

 

“அரசு, தனியார் பேருந்துகளில் ஏ.சி. பயன்படுத்த அனுமதி” :  தமிழக அரசு

குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

“அரசு, தனியார் பேருந்துகளில் ஏ.சி. பயன்படுத்த அனுமதி” :  தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் பேருந்து சேவை ரத்தானது. இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது.

“அரசு, தனியார் பேருந்துகளில் ஏ.சி. பயன்படுத்த அனுமதி” :  தமிழக அரசு

இந்நிலையில் அரசு .தனியார் பேருந்துகளில் ஏ.சி. பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக பேருந்துகளில் ஏ.சி. வசதி தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 24 – 30 டிகிரி செல்சியஸ் அளவிலேயே ஏசி வசதியை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் , தொழிற்சாலைகளுக்கும் ஏ.சி. வசதியுடன் பேருந்துகளை இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. பேருந்துகளில் 65 வயதான நபர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 2020 மார்ச் 25 முதல் 702 ஏசி அரசு பேருந்துகள் இயங்காததால் வருவாய் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மீண்டும் ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.