தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி!
Aug 8, 2020, 09:28 IST1596859121000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையை பொருத்தவரையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேசமயம் ஏழாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் தமிழக அரசு அளித்து வருகிறது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மாவட்டத்திற்குள்ளாக செல்வதற்கு இ-பாஸ் நடைமுறை தேவை இல்லை என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.