‘மேலும் 3 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி’ : தமிழக அரசு அரசாணை!

 

‘மேலும் 3 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி’ : தமிழக அரசு அரசாணை!

சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

‘மேலும் 3 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி’ : தமிழக அரசு அரசாணை!

அரசாணையில், ‘ஜன.15ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பெறுகிறது. புதுக்கோட்டை திருமயம் அருகே ராயபுரத்திலும், சேலம் ஆத்தூர் அருகே கூலமேட்டிலும், திருச்சி திருவெற்றியூர் அருகே சூரியலூரிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வரும் 15ம் தேதியிலுருந்து தொடங்கவிருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

‘மேலும் 3 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி’ : தமிழக அரசு அரசாணை!

மாடு பிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை, மாடுகள் முன்பதிவு, வாடிவாசல் அமைப்பு என அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய 3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சூரியலூர், ராயபுரம், கூலமேடு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.