புதுச்சேரி கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி!

 

புதுச்சேரி கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி!

புதுச்சேரி கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதியளிக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி!

இன்னும் சில நாட்களில் 2021 ஆம் ஆண்டு பிறக்க போகிறது. 2020 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே கொரோனா காரணமாக இயல்பு நிலையை இழந்து பல இழப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் வரும் வருடத்தை மக்கள் வரவேற்க பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கிடக்கின்றனர்.

புதுச்சேரி கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி!

இந்நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கம் போல நடக்கும் – என்றும் எந்தவித தடையும் கிடையாது. அதேபோல் விடுதிகளில் புத்தாண்டன்று 200 பேரை அனுமதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணாமாக கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.