`விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்யலாம்!’- தமிழக அரசு அனுமதி

 

`விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்யலாம்!’- தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே முடங்கிவிட்டனர். சினிமா படப்பிடிப்பு, விளையாட்டு பயிற்சி ஆகியவை தடைபட்டது. 4 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் என கூறி உள்ளது.

விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 15 வயதுக்கு கீழ் மற்றும் 50 வயதுக்கு மேலான வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது.