“தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிவர்களுக்கு பணி நிரந்தரம்” : அமைச்சர் சேகர் பாபு

 

“தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிவர்களுக்கு  பணி நிரந்தரம்” :  அமைச்சர் சேகர் பாபு

தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரிவர்களின் பணி, ஒரு மாதத்திற்குள் நிரந்தரம் செய்யப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

“தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிவர்களுக்கு  பணி நிரந்தரம்” :  அமைச்சர் சேகர் பாபு

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில், , “தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணி புரிபவர்களின் பணி, ஒரு மாதத்திற்கு நிரந்தரம் செய்யப்படும், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் வாடகைக்கு இருப்பவர்கள் அதை ஒத்துக்கொண்டு திருக்கோவிலுக்கு உரிய மனுவினை அளித்தால் அவர்களை வாடகைதாரர்கள் ஆக ஏற்று உத்தரவு வழங்கப்படும்.

“தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிவர்களுக்கு  பணி நிரந்தரம்” :  அமைச்சர் சேகர் பாபு

கடந்த ஆட்சியில் பத்தாண்டு காலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் குடமுழுக்கு மராமத்து பணிகள் நடக்காமல் இருந்துள்ளது. இதற்கெல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் தொற்று முடியும் வரை கோயில்களில் அன்னதானம் பொருளாக மட்டுமே வழங்கப்படும். கொரோனா பரவல் உச்சத்திலிருந்து தமிழகம் விடை பெற்று நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.அதிமுக ஆட்சியில் கோயில் சிலைகள் மாற்றப்பட்டதாக கூறப்படும் புகார்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.