பெரியார் சிலைக்கு தீவைப்பு!

 

பெரியார் சிலைக்கு தீவைப்பு!

பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி வந்த நிலையில் ஒருபடி மேலே சென்று மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் சிலைக்கு தீவைப்பு!

பெண் விடுதலை, சமூகநீதிக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். சாகும்வரை மக்கள் தொண்டில் ஈடுபட்ட இந்த பழுத்த பழத்தின் குரல் , மாய்ந்த பின்பும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் தான் என்னவோ அவரின் குரலை ஒடுக்க சசிலர் எண்ணுகின்றனர். பெரியாரின் குரல் தமிழகத்தில் கேட்கும் வரை இங்கு மத சாயம் பூச முடியாது என்று நினைத்து சில விஷம தனமான செயல்களில் மர்மநபர்கள் சிலர் ஈடுபட்டு கொண்டு இருப்பது தொடர்கதையாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அவமதிக்கப்பட்டு வருகிறது பெரியார் சிலை . பெரியார் சிலைக்கு காவி சாயம், செருப்பு மாலை என பல அவமதிப்புகள் நடந்தேறி கொண்டே இருக்கிறது.

பெரியார் சிலைக்கு தீவைப்பு!

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழை மேடு பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் நள்ளிரவில் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி குப்பம்சாலையில் உள்ள சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் வெண்கல சிலைக்கு நள்ளிரவில் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் சிலைக்கு தீவைத்த நபர்களை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.