பெரியார் சிலை அவமதிப்பு : தமிழக பாஜக கண்டனம்!

 

பெரியார் சிலை அவமதிப்பு : தமிழக பாஜக கண்டனம்!

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை அவமதிப்பு : தமிழக பாஜக கண்டனம்!

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு காவி பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டது. இதற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் திமுக தலைவர் ஸ்டாலின், எம்பி கனிமொழி., வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல். முருகன், “திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அநாகரிக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்.அனைவரையும் அரவணைக்கும் தியாகப் அன்பின் அடையாளமே காவி. தவறான சிந்தனையில் பயன்படுத்துவது பண்பல்ல” என்று கூறியுள்ளார் .