சாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி

 

சாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி

கோவை

கோவையில் சாதி ஒழிப்பிற்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, சாதி ஒழிப்பிற்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

சாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், பெரியாரின் ஆணைக்கிணங்க சாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவை கொளுத்தியதற்காக சிறை சென்றவர்கள், அங்கேயே உயிரிழந்ததாகவும், அதன் 73ஆம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி இன்று வீர வணக்கம் செலுத்தியதாகவும் தெரிவித்தனர்.