நெல்லையில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும்! – இந்து மக்கள் கட்சி திடீர் ஆர்ப்பாட்டம்

 

நெல்லையில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும்! – இந்து மக்கள் கட்சி திடீர் ஆர்ப்பாட்டம்

கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்தும், பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை அகற்ற வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லையில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும்! – இந்து மக்கள் கட்சி திடீர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை உள்ளது. அங்கு இன்று காலை இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும், பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர். திராவிடர் கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டையை தீவைத்து எரித்தனர்.

நெல்லையில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும்! – இந்து மக்கள் கட்சி திடீர் ஆர்ப்பாட்டம்
அனுமதியை மீறி பொது இடத்தில் தீவைத்தது உள்ளிட்ட காரணங்களால் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்ளிட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.