ஆளுநர் மாளிகை முற்றுகை; தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் போராட்டம் அறிவிப்பு!

 

ஆளுநர் மாளிகை முற்றுகை; தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் போராட்டம் அறிவிப்பு!

மருத்துவ படிப்புக்கான 7.5% இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் வரும் 23ம் தேதி போராட்டம் நடத்த உள்ளது.

கோவையில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இலங்கை அரசுக்கும் இராஜபக்சேவிற்கும் உறுதுணையாக இருந்த முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்பதே அனைவரது விருப்பம். வரும் 21ம் தேதி அவரது வீட்டுக்கு சென்று நேரில் வலியுறுத்தவிருக்கிறோம் என தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகை முற்றுகை; தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் போராட்டம் அறிவிப்பு!

தொடர்ந்து,ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்காத முத்தையா தற்போது இந்த விவகாரம் சர்ச்சையானதால் போலியாக நடிக்கிறார். ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் கோட்சாக அவர் இருப்பதை கூட நாங்கள் விரும்பவில்லை. மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில், 7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தை போலவே ஆளுநர் இருக்கிறார். இது பாஜகவின் செயல் என தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகை முற்றுகை; தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் போராட்டம் அறிவிப்பு!

மேலும், தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் 23ம் தேதி, தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் அறிவித்தார்.