பெரியார், அம்பேத்கர் போட்டோ மீது சாணி கரைத்து ஊற்றிய மர்மநபர்கள்!!

 

பெரியார், அம்பேத்கர் போட்டோ மீது சாணி கரைத்து ஊற்றிய மர்மநபர்கள்!!

பெரியார், அம்பேத்கர் படங்கள் மீது சாணி ஊற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார், அம்பேத்கர் போட்டோ மீது சாணி கரைத்து ஊற்றிய மர்மநபர்கள்!!

கிருஷ்ணகிரி அருகே மோட்டூர் அம்பேத்கர் காலனியில் உள்ள சுவற்றில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் உருவம் வரையப்பட்டுள்ளது. அம்பேத்கர் பெரியாரின் பிறந்த நாள், நினைவு நாட்களில் இந்த இடத்தில் அப்பகுதியினர் மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த சூழலில் நாளை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அங்கு பிறந்தநாள் கொண்டாட்ட விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பெரியார் மற்றும் அம்பேத்கரின் படங்களுக்கு வர்ணம் தீட்டி புதுப்பித்து இருந்தனர்.

பெரியார், அம்பேத்கர் போட்டோ மீது சாணி கரைத்து ஊற்றிய மர்மநபர்கள்!!

இந்த நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் அம்பேத்கர் மற்றும் பெரியார் படங்கள் மீது சாணியை கரைத்து ஊற்றியுள்ளனர் . இதை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதிக்கு வந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அம்பேத்கர் காலனியில் இருதரப்பினர் இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருவதாகவும், ஒரு தரப்பினர் வர்ணம் பூசியதால் ,மற்றொரு தரப்பினர் படங்களின் மீது சாணியை கரைத்து ஊற்றியதும் தெரியவந்தது. இதுபோன்ற விஷம செயல்களில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அத்துடன் அப்பகுதியில் வேறு எந்த அசம்பாவிதமும் நடந்திடாத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.